இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை

நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரவு முழுவதும் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தமிழக முழுவதும் தற்போது கோடை காலம் நடைபெற்று வரும் நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்தவரும் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகி வருகின்றது நாளைகள் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு 11 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது.இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது சில இடங்களில் மழையின் காரணமாக பாதுகாப்பு கருதி அறிவிக்கப்படாத மின்வெட்டும் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கன மழையால் குளிர்ச்சியான சீதோசன நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story