இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை

இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை

மழை

நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் சத்தம் இல்லாமல் கனமழை கொட்டி தீர்த்தது.
தர்மபுரி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 95 முதல் 99.5 டிகிரி செல்சியஸ் வரை நிலவி வந்தது இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர் மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தர்மபுரி மாவட்டம் தொடர் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியிலிருந்து நல்லம்பள்ளி,கோவிலூர், லளிகம்,பூதனஅள்ளி, உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சத்தம் இல்லாமல் கனமழை கொட்டி தீர்த்தது இதனால் சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டு இன்று காலை குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Tags

Next Story