ராசிபுரத்தில் ஒரு மணி நேரமாக கனமழை

ராசிபுரத்தில் ஒரு மணி நேரமாக கனமழை குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. மேலும் 100.105 டிகிரிக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தொடர்ந்து மக்கள் பல்வேறு சரும பிரச்சனைகளால் அவதி அடைந்து வந்தனர். மழை இல்லாததால் உக்கரத்தில் தவித்து வந்த நிலையில் தற்போது ராசிபுரத்தில் திடீரென மேகமூட்டம் காணப்பட்டு சாரல் மழையாக தொடங்கிய மழை கனமழையாக ஒரு மணி நேரம் பெய்து வருகிறது. இதனால் தற்போது ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ந்த காற்று வீசு வருவதால் பொதுமக்கள், குழந்தைகள், பெரியோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகளும் இந்த மழையால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story