ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை

திண்டுக்கல், சுற்றுப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திண்டுக்கல் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அவ்வப்போது வெயில் அடித்தாலும் குளிர்ச்சியான சூழ்நிலையே நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திண்டுக்கல் நகரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags

Next Story