திருச்சுழியில் வெளுத்து வாங்கிய கனமழை

திருச்சுழியில் வெளுத்து வாங்கிய கனமழை

திருச்சுழியில் கனமழை

திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளான பரளச்சி, ம.ரெட்டியபட்டி,கல்லூரணி, தமிழ்பாடி, மண்டபசாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக பகல் பொழுதில் கடும் வெயில் வாட்டி வதைத்த சூழலில் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. மேலும் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்ததால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

Tags

Next Story