கரம்பக்குடியில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

கரம்பக்குடியில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

கரம்பக்குடியில் மாலையில் மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

கரம்பக்குடியில் மாலையில் மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த அரை மணி நேரமாக நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் நல்ல பெய்யும் மழை பெய்தது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. ஆனால் அவர்கள் தெரிவித்தற்கு நேர்மாறாக இன்று காலை முதல் மழை பெய்யவில்லை, இந்நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மேகம் இருண்டு லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் ஆக ஆக இந்த மழையானது கன மழையாக மாறியது, இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story