கும்பகோணத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை .

கும்பகோணத்தில்  சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை .

மழை


கும்பகோணத்தில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்து இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது லேசான கனமழைமழை மட்டுமே பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5மணியிலிருந்து கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள அம்மா சத்திரம் கரிக்குளம் திருநாகேஸ்வரம். செட்டி மண்டபம் கருப்பூர் திருபுவனம்தாராசுரம் திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்,

Tags

Next Story