வேப்பனபள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

வேப்பனபள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

பைல் படம் 

வேப்பனபள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்தில் காணப்பட்ட வந்த நிலையில் திடீரென்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. வேப்பனப்பள்ளி நேரலகிரி நாச்சிகுப்பம் தீர்த்தம் நெடுசாலை சிங்கிரிப்பள்ளி மற்றும் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கன மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story