வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

வேப்பனப்பள்ளியில் மழை  

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வந்த நிலையில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனமழை வெளுத்து வாங்கியது. இதில் வேப்பனப்பள்ளி நாச்சிகுப்பம், கொங்கனப்பள்ளி, மாதேப்பள்ளி, தீர்த்தம், நேர்லகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் இப்பகுதியில் குளிந்த சீதோசன நிலை வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story