வேப்பனப்பள்ளி,குருபரப்பள்ளி, சூளகிரியில் கனமழை

வேப்பனப்பள்ளி,குருபரப்பள்ளி, சூளகிரியில் கனமழை
கனமழை 
வேப்பனப்பள்ளி,குருபரப்பள்ளி சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதில் வேப்பனப்பள்ளி,குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது.

இந்த கனமழையில் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தொடரை கன மழை பெய்தால் இப்பகுதி வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை வருகிறது. பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story