விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தர்மபுரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பொழிந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி, கோவிலூர், லளிகம், கோபாலம்பட்டி, தொப்பூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் 2 நேற்று இரவு 11 மணி முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நலன் கருதி மின்நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story