ஜெயங்கொண்டத்தில் இடி ,மின்னலுடன் கூடிய பலத்த மழை

ஜெயங்கொண்டத்தில் இடி ,மின்னலுடன் கூடிய பலத்த மழை

ஜெயங்கொண்டத்தில் மழை 

ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி  மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப காற்று வீசியது. வீட்டில் இருக்க முடியாத நிலையிலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும் நிலை ஏற்பட்டது இந்நிலையில் இன்றும் கடுமையான வெப்பம் வீசிய நிலையில் அநேக பேருக்கு வியர்த்து கொட்டியது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் கருமேகங்களாக சூழ்ந்து திடீரென லேசாக ஆரம்பித்த மழை சிறிது நேரத்தில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக் கொடுத்து ஓடியது .மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story