குறிஞ்சிப்பாடி பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

குறிஞ்சிப்பாடி பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

கனமழை

குறிஞ்சிப்பாடி பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது . இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story