ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை

ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை

மழை

ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் நேற்று இரவு திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் கழிவு நீருடன், மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நேற்று இரவு பெய்த மழையினால் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோன்று வாலாஜாவில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை இடி, மின்னல் மற்றும் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story