விராலிமலையில் இடி மின்னலுடன் பலத்த மழை!

விராலிமலையில் இடி, மின்னலுடன் நேற்று 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விராலிமலையில் இடி, மின்னலுடன் வெள்ளிக்கிழமை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. 3ஆவது நாளாக வியாழக்கிழமை மாலையும் மழை பெய்தது. முதலில் மிதமாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக மாறியது.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழையாக பெய்த நிலையில், பின்னர் விட்டு விட்டு சாரல் மழையாக பெய்தது. மழையா குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.இந்நிலையில், 4ஆவது நாளாக விராலிமலையில் இடி மின்னலுடன் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Tags

Next Story