மதுராந்தகத்தில் இடியுடன் கூடிய கன மழை

மதுராந்தகத்தில் ஒரு மேணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது கோடை முடிந்த பிறகும் வெப்பம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இடி மின்னல்களுடன் கன மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மதுராந்தகம் கருங்குழி மேலவேலம்பேட்டை சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக மதுராந்தகம் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story