மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதியில் இடியுடன் கூடிய கனமழை

மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதியில்  இடியுடன் கூடிய கனமழை
மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதியில் இடியுடன் கூடிய கனமழை
மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதியில் பல நாட்களாக ஏமாற்றி வந்த மழை இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் மட்டும் சுமார் அரை மணி நேரம் மட்டுமேமிதமான மழை பெய்து வந்தது. ஆனால் மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளான மொறப்பாக்கம், பெரும்பாக்கம்,தண்டரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மேகம் இருள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இழிவுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.

கடந்த மூன்று நான்கு நாட்களாக மேகம் இருள் சூழ்ந்த சாரல் மழை மிதமான மழை பெய்து ஏமாற்றி வந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று கடுமையாக இருந்தாலும் பிற்பகல் நான்கு மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது..இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Tags

Next Story