கொடைக்கானல்: இடி மின்னலுடன் கனமழை

கொடைக்கானல்: இடி மின்னலுடன் கனமழை

கொடைக்கானலில் கனமழை

கொடைக்கானல் மலைப்பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதலே மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில்,பிற்பகல் வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

குறிப்பாக அப்சர்வேட்டரி, கலையரங்கம், ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், 7ரோடு சந்திப்பு, பியர் சோலா சாலை, அண்ணாசாலை, அண்ணாநகர், நாயுடுபுரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும்,பூம்பாறை,மன்னவனூர், பெருமாள்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களிலும் கன மழையாகவும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்தது. மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடுத்த கட்ட விவசாய பணிகளுக்கு இந்த மழை பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story