சிங்கப்புணரியில் பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

சிங்கப்புணரியில் பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

சிங்கப்புணரியில் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்த்த்டால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


சிங்கப்புணரியில் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சிங்கம்புணரி பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேங்கைப்பட்டி, பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, எஸ்.விமங்கலம், களாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடத்திற்க்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இருப்பினும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. கோடை காலத்தில் பெய்த இந்த மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Tags

Next Story