ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டி தீர்த்த மழை

ஸ்ரீவில்லிபுத்தூரில் 1 மணி நேரமாக பலத்த இடி மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்தை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அக்னி நட்சத்திரமானது பகல் நேரத்தில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெயில் சுட்டெரித்தாலும் கடந்த மூன்று தினங்களாக மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதுடன் ஆங்காங்கே மழையும் பெய்தது.

கடந்த மூன்று தினங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று பலத்த இடி மற்றும் மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி மட்டுமில்லாமல் ராமச்சந்திராபுரம், கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, மல்லி, வன்னியம்பட்டி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த அதீத கனமழையால் சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது மாலை நேரத்தில் தங்களது தேவைகளை தீர்த்துக்கொள்ள வெளியேறிய பொதுமக்கள் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர் தொடர்ந்து சாரல் மழையும் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருவதால் வெப்பம் முற்றிலும் தணிந்து நகர் பகுதி எங்கும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் சற்று கணிசமாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story