பலத்த மழை: ரயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கியது!

பலத்த மழை: ரயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கியது!

சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீர்

கோவில்பட்டியில் பெய்து வரும் பலத்த மழையால் ரயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கியது. 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இன்றும் காலை முதல் லேசான சாரல் மழையும் பெய்தது. நேரம் செல்ல செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கியது. மழைநீர் தேங்கியதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், வாகன ஓட்டிகள் சிலர் அதனை பொருட்படுத்தாமல் சென்றனர். கோவில்பட்டி நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை தொடர்ச்சியாக பெய்தது

Tags

Next Story