காஞ்சிபுரத்தில் இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு

காஞ்சிபுரத்தில் இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு

பனிப்பொழிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்து இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை நேரம் முதல் காலை 8 மணி வரையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காஞ்சிபுரம் மாநகர பகுதிகளிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பொன்னேரிக்கரை,ரயில் நிலையம், வையாவூர், ஏனாத்தூர்,ஓரிக்கை, செவிலிமேடு, களக்காட்டூர், விப்பேடு, விஷார், கீழம்பி, சிறு காவேரிப்பாக்கம், காரை, சிறுவாக்கம், பரந்தூர், உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

Tags

Next Story