சாலையோர வாகனங்களால் வாலாஜாபாதில் கடும் நெரிசல் !

சாலையோர வாகனங்களால் வாலாஜாபாதில் கடும் நெரிசல் !

நெரிசல்

கடைகள் முன் சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் மற்றும் ஒரகடம், படப்பை வழியாக தாம்பரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம்அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், இச்சாலையில் செல்லும் லாரிகள், பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல இயலாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும்வாலாஜாபாத் காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், வேளாண் அலுவலகம் மற்றும் ரயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு செல்வோர் கடும் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே, இச்சாலையில் கடைகள் முன் சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story