கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் தொடர் விடுமுறை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கொடைக்கானலில் தொடர் விடுமுறை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம், இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது, இதனையடுத்து இன்று நகர்ப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஏரிச்சாலை,கலையரங்கம், மூஞ்சிக்கல், கல்லறை மேடு,அப்சர்வேட்டரி உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 100க்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தப்படி சென்று வருகின்றன,இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர், இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி மாற்று சாலை விரைவில் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story