சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை

சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஆலங்கட்டி மழை 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர்,மேட்டமலை, வீரபாண்டியாபுரம், படந்தால்,இருக்கன்குடி, நென்மேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வெப்பமும் அதிகரித்து வந்தது.இந்நிலையில் இன்று மதியம் முதல் இந்த பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர் மதியத்திற்கு மேல் மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனபெய்த மழையால் இந்த பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது.மேலும் மேட்டமலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மரம் முறிந்து விழுந்து இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இப்பகுதியில் பெய்து வரும் மழையால் சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதனைத் தொடர்ந்து விருதுநகர் சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags

Next Story