ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி

ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி

ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி

போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி குமாரபாளையத்தில் ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி நடந்தது. தமிழக அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி ராஜம் தியேட்டர் முன்பிருந்து துவங்கி, சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை வழியாக சென்று பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறைவு பெற்றது. நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன், சரவணன், பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன், உமாமகேஸ்வரி, நித்யா, சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வாகன முகவர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் பிடித்தவாறு பேரணியில் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் டெம்போ, டூரிஸ்ட், ஆட்டோ இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பினை பின்பற்றி வாகனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.

Tags

Next Story