தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற தலைக்கவச விழிப்புணர்வு பேரணியில் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறை சார்பில், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி பூந்தமல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

இதில் பள்ளி மாணவர்களும், போலீஸாரும் தலைக்கவசம் அணிந்தபடி பேரணியாக வந்து, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு குறித்த கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

மேலும், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேரணியில் ஈடுபட்ட மாணவர்களும், போலீஸாரும் எடுத்துக் கூறி தலைக்கவசம் அணிய வைத்தனர். நிகழ்ச்சியில், பூந்தமல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்திரமெüலி மற்றும் உதவி ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story