டாஸ்மாக்கில் ஹெல்மட் கொள்ளையர்கள் கைவரிசை - பதறவைக்கும் சிசிடிவி

டாஸ்மாக்கில் ஹெல்மட் கொள்ளையர்கள் கைவரிசை - பதறவைக்கும் சிசிடிவி

சிசிடிவி காட்சி 

சோழவந்தான் அருகே டாஸ்மாக்கில் பட்டாகத்தியால் விற்பனையாளரை வெட்டி, ரூ.1 லட்சம் பணம் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ரோட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபவர் கணேஷ்குமார். நேற்று இரவு பணி முடித்து திரும்பிய மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் என்பவரை திடீரென தலையில் ஹெல்மெட் அணிந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து பட்டாக்கத்தி மற்றும் ஆயுதங்களுடன் அவரை தலையில் தாக்கி கடையை திறக்கச் சொல்லி அங்கிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இதனால் தலையில் காயமுற்ற கணேஷ் குமார் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் புழக்கம் உள்ள இடத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story