கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க உதவி எண்கள்

கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க உதவி எண்கள்

உதவி எண்கள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை தொடர்ந்து கந்துவட்டி கொடுமையை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் 9443967578 மற்றும் 9042738739 என்ற வாட்ஸ் ஆப் வசதியுடன் கூடிய எண்களில் புகார் அளிக்கலாம் எனவும் 24 மணி நேரமும் செயல்படும் இரண்டு எண்களில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் கந்துவட்டி தொடர்பாக புகார் அளித்தால் உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

Tags

Next Story