மூலிகை ஆராய்ச்சி மைய 2நாள் கருத்தரங்கு ஊட்டியில் இன்று துவங்கியது !

மூலிகை ஆராய்ச்சி மைய 2நாள் கருத்தரங்கு ஊட்டியில் இன்று துவங்கியது !

தேசிய கருத்தரங்கம் 

மூலிகை மருத்துவ செடிகளுக்கு கொள்முதல் மையங்கள் ஏற்படுத்தப்படும் என தேசிய ஓமியோபதி ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் எமரால்டில் உள்ள மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் மூலிகை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் ஊட்டியில் இன்று தொடங்கியது. மூலிகை ஆராய்ச்சி மைய தலைமை இயக்குநர் சுபாஷ் கவுசிக் வரவேற்றார். எமரால்டு மூலிகை ஆராய்சசி மைய பொறுப்பாளர் சசிகாந்த் கருத்தரங்கு குறித்து விளக்கினார். தேசிய ஓமியோபதி ஆணைய தலைவர் அணில் குரானா தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து, கருத்தரங்க மலரை வெளியிட்டார். அவர் கூறியதாவது, ஊட்டி எமரால்டில் உள்ள மூலிகை ஆராய்ச்சி மையம் 7.5 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 70 வெளிநாட்டு மூலிகைகள் பயிரிடப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மூலிகைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு 3.15 மெட்ரிக் டன் மூலிகைகள் உற்பத்தி செய்யப்பட்டன. கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் மூலிகைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, மூலிகை வேளாண் தொழில்நுட்பங்களை ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் மூலிகைகளை ஊடுபயிராக பயிரிட்டு, பலனடையலாம். அவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும். நமக்கு தேவையாக மூலிகைகள் 69 சதவீதம் காடுகளிலிருந்து பெறப்படுகிறது. மீதமுள்ள 31 சதவீதம் மட்டுமே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பயிரிடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 70 மூலிகைகள் பயிரிடப்படுவதால், அவற்றின் சாகுபடியை பெருக்கி தேவையை பூர்த்தி செய்ய முடியும். மூலிகைகளின் சந்தை மதிப்பு அதிகம் என்பதால், விவசாயிகள் மூலிகை விவசாயத்தை மேற்கொண்டு அதிக வருவாய் பெறலாம். விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் மூலிகை மருத்துவ செடிகளுக்கு விற்பனை வாய்ப்பு ஏற்படுத்தி தருகின்ற வகையில் மண்டி எனப்படும் கொள்முதல் மையங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், வீணாகும் மூலிகை மற்றும் கழிவுகள் நல்ல உரமாகும். இதை உரமாக பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தலாம். ஊட்டியில் உள்ள மூலிகை ஆராய்ச்சி மையம் மூலிகை பொருட்கள் ஆய்வகமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆயுஷ் அமைச்சக ஓமியோபதி ஆலோசகர் சங்கீதா துகல், கேரள மூலிகை துறை தலைவர் ஷோபா சந்திரன் உள்பட பலர் கலந்து இந்நிகழ்வில் கொண்டனர்.

Tags

Next Story