மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

உதவி கலெக்டர் பாத்திமா பேச்சு 

அரக்கோணம் வி.ஜி.என் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கலந்து கொண்டார்.

அரக்கோணம் டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது 12-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் உயர்கல்வி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு அரசு உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நிகழ்ச்சி நடத்துவதாகவும், அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகள் குறித்தம் விளக்கினார். ராணிப்பேட்டை மாவட்ட திறன் பயிற்சி மைய பயிற்சி அலுவலர் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் தொழிற்சாலைகளிலும், வெளிநாடுகளிலும் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் அரக்கோணம் தாசில்தார் செல்வி, அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ. முதல்வர் சித்ரா மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story