கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு

கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு

அமைச்சர் பொன்முடி ஆய்வு

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் திரு.வி.க.அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூபாய் 5 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 21 வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது. அந்த இடத்தினை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார்.இதனை தொடர்ந்து ,அவர் திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இந்த கல்லூரியில் 14 பட்டப்படிப்புகளும், 11 பட்ட மேற்படிப்புகளும் உள்ளது .இந்த கல்லூரியை அமைத்து தந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நீங்கள் பெருமை சேர்க்க நினைத்தால் மிகச் சிறந்த மாணவராக நல்ல முறையில் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். தற்போதைய முதலமைச்சர் இரண்டு குறிக்கோள்களில் தீவிரமாக இருக்கிறார். ஒன்று கல்வி, மற்றொன்று சுகாதாரம் .ஆகவே கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்.

Tags

Next Story