நெடுஞ்சாலைத்துறையினர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

நெடுஞ்சாலைத்துறையினர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

உறுதிமொழி நிகழ்ச்சியின் போது

எடப்பாடி கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குரிமை என் கடமை என ஒவ்வொருத்தரும் தவறாமல் ஜனநாயக உரிமையை காத்திட வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு முழக்கமாக, சேலம் மாவட்ட, ம் எடப்பாடி கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோட்டத் தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குரிமையை தவறாமல் செலுத்துவோம், பணமும் பொருளும் பெற மாட்டோம் எங்கள் வாக்கை விற்பது குற்றம் என்பதை அறிவோம், சாதி சமயம் பாராமல் இந்திய திருநாட்டின் மக்கள் நலனை காத்திட வாக்கு செலுத்திடுவோம், என ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் என உறுதிமொழி ஏற்றினார்.

இதில் கோட்டத் துணைத் தலைவர்கள் முருகேசன் சீனிவாசன், இணைச் செயலாளர்கள் செல்வன், மீனாட்சிசுந்தரம்,மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன்,மாவட்டத் தலைவர் குமரகுருபரன், கோட்டச் செயலாளர் கலைவாணன் அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story