சாலையை சுத்தம் செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தீவிரம்

தர்மபுரி நான்கு ரோடு முதல் ஓட்டப்பட்டி வரையிலான சாலை தடுப்பு சார் அருகே உள்ள மண் மற்றும் குப்பைகள் அகற்றும் பணியில் தீவிரமாக நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தர்மபுரி நான்கு ரோடு முதல் ஓட்டப்பட்டி வரை சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு சுவரின் இரு புறங்களிலும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் தடுப்பு சுவரை சுற்றிலும் மண், மற்றும் குப்பைகள் சூழ்ந்துள்ளது இதனால் சாலையில் மழை நீர் பல்வேறு இடங்களில் தேக்கமடைவதால் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதை அடுத்து, மழை நீர் வடிய சாலை தடுப்பு சுவர் அருகாமையில் உள்ள மண் மற்றும் குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியில் இன்று நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நான்கு ரோடு பகுதியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story