நெடுஞ்சாலை துறை பணியாளர் செயற்குழு கூட்டம்

நெடுஞ்சாலை துறை பணியாளர் செயற்குழு கூட்டம்

நெடுஞ்சாலை துறை பணியாளர் செயற்குழு கூட்டம்

திருப்பத்தூரில் நடைபெற்ற நெடுஞ்சாலை துறை பணியாளர் செயற்குழு கூட்டத்தில் தமிழக நெடுஞ்சாலை துறையில் புதிதாக 7500 சாலை பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் திருப்பத்தூர் உட் கோட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சண்முகராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் , தமிழக நெடுஞ்சாலை துறையில் புதிதாக 7500 சாலை பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திருப்பத்தூர் உட் கோட்ட செயலாளர் குமார், பொருளாளர் ஜெகதீசன் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேட்டி_மாநில தலைவர் சண்முக ராஜா

Tags

Next Story