இந்து அறநிலையத்துறை சீராய்வுக் கூட்டம்: அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த சீராய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். மணிவாசன் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன் ஆணையர் முரளீதரன் கூடுதல் ஆணையர்கள் சங்கர் திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா, திருமதி மா.கவிதா, தலைமைப் பொறியாளர் திரு.பி.பெரியசாமி, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.




Tags

Next Story