அனுமதி இல்லாமல் ஜெபவீடுகள் - இந்து முன்னணியினர் புகார்

அனுமதி இல்லாமல் ஜெபவீடுகள் - இந்து முன்னணியினர் புகார்

இந்து முன்னணி சார்பாக தேனி காவல் நிலையத்தில் புகார் மனு

தேனியில் அனுமதி இல்லாமல் நடைபெற்று வரும் கிறிஸ்துவ ஜெப வீடுகளை தவிர்க்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது
இந்து முன்னணி சார்பாக தேனீர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் சுற்றிலும் கிறிஸ்துவ ஜெப கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்துக்கு வரக்கூடிய மக்களை ஜெபத்திற்கு அழைத்துச் சென்று மதமாற்றும் வேலைகளும் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாத கிறிஸ்துவ ஜெப வீடு நடைபெற்று வருகிறது இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கத்தின் தேனி நகர் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம், தவறும் பட்சத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை காவல்துறைக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

Tags

Next Story