விசைத்தறி கூலி கேட்டவருக்கு அடி, உதை

விசைத்தறி கூலி கேட்டவருக்கு அடி, உதை

விசாரணை

குமாரபாளையத்தில் விசைத்தறி கூலி கேட்டவருக்கு அடி, உதை கொடுத்த முதலாளி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் நரசிம்மன், 56. விசைத்தறி கூலி. இவர் முருங்கைக்காடு சுந்தரராஜ், 60, என்பவர் விசைத்தறி கூடத்தில் வேலை செய்ததாகவும், சம்பளம் சரியாக கொடுக்காததால், வேறு இடத்தில் பணியில் சேர்ந்ததாகவும் தெரிகிறது. ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் ஒரு வார கூலி வரவேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. பிப். 17 காலை 08:00 மணியளவில், நரசிம்மன், அவர் தம்பி கிருஷ்ணன், 52 இருவரும், நரசிம்மன் வீட்டின் முன்பு நின்றிருந்த போது, அவ்வழியே சென்ற சுந்தரராஜ் வசம், தனக்கு வரவேண்டிய ஒரு வார கூலியை தர வேண்டி கேட்க, வழியில் போகும் போது கூலி கேட்கிறாயா? எனக்கூறி, சுந்தரராஜ் , நரசிம்மனை அடித்ததாக தெரிகிறது. இதனால் நரசிம்மன் தம்பி கிருஷ்ணன், நரசிம்மன் மனைவி ஆகியோர், சண்டை போட்ட சுந்தரராஜை விலக்கி விட்டுள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்து, சுந்தரராஜ் மற்றும் அவருடன் வந்த சரவணன், 46, மற்றும் இருவர், நரசிம்மன் தம்பி, மனைவியை தாக்கியதில் கிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம்போலீசார் வழக்குப்பதிவுசெய்து, சுந்தரராஜ், சரவணன் இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story