வெளிநாட்டு சிகரெட் பதுக்கி விற்பனை - 2 பேர் கைது

மண்ணடி பகுதியில் சட்ட விரோதமாக வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது செய்து அவர்களிடம் இருந்து 200 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த இலங்கையை சேர்ந்த கிருஷ்ணமேனன் நுவராலயா, , கிரிஷாந்த் வத்தலா, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த மண்ணடி தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்டு, 200 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கிருஷ்ணமேனன் மற்றும் கிரிஷாந்த் ஆகிய இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags

Next Story