ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவேரி ஆற்றிற்கு தினந்தோறும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் சமீப காலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது வினாடிக்கு சுமார் 1500 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதை அடுத்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தளம் கலை கட்டி உள்ளது.

Tags

Next Story