சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட ஒகேனக்கல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா,கேரளா,கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் அவ்வாறு வருபவர்கள் அருவிகளில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 300 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மேலும் தற்போது கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர்கள் என எதிர்பார்த்த நிலையில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. குறைந்த அளவே சுற்றுலா பயணிகளின் வருகை இருந்ததால் ஒகேனக்கல் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story