சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை

ஆஷா அஜித்

சிவகங்கை மாவட்டத்தில் 4 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தகவல்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வருகிற 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையும், ஜூன் 4- ஆம் தேதியும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள மதுக்கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளதால், பொது அமைதியை காக்கவும், சுமூகமாக வாக்குப்பதிவு நடைபெறவும், மதுக்கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் வருகிற 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையும், ஜூன் 4-ஆம் தேதியும் மூடப்படும். மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்து வாகனங்களின் கொண்டு செல்லவும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்

Tags

Next Story