மழைநீர் சூழ்ந்துள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

வத்திராயிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அரசு பள்ளி வளாகத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பாதிக்கப்பட்ட இரண்டு அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நேற்று முன்தினம் பெய்த தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு தாலுகா பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியது.தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது .மழைநீர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்குள் நுழைந்ததால் நேற்று ஒரு நாள் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம், கூமாபட்டி உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று முன்தினம் தேங்கிய மழை நீர் வழியாததால் இன்று ஒரு நாள் மட்டும் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கூமாப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் முற்றிலும் வெளியேறிய பின்பே பள்ளி திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story