டிரினிடி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருக்குடமுழுக்கு நிறைவு விழா!

நாமக்கல், மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள டிரினிடி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ வித்யா கணபதி ஆலயத்தில் கடந்த 21/01/2024 நாள் அன்று திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 24 நாட்கள் மண்டல அபிஷேகம் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. அதன் நிறைவு நாளான நேற்று ஸ்ரீ வித்யா கணபதி மற்றும் அதன் பரிவார தெய்வங்கள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ஹயக்கீரிவர் ஆகிய தெய்வங்களுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ வித்யா கணபதிக்கு கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தலைவர் டாக்டர்.R.குழந்தைவேல், டாக்டர்.மல்லிகா குழந்தைவேல், செயலாளர் திரு.D.சந்திரசேகரன், டிரினிடி சி.பி.எஸ்.சி பள்ளியின் செயலாளர்.திரு.ராமசீனிவாசன், டிரினிடி மகளிர் கல்லூரியின் செயல் இயக்குநர் திருமதி.அருணா செல்வராஜ், டிரினிடி பள்ளியின் முதல்வர்.திரு.எஸ்.சோமசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

Tags

Next Story