வீடு புகுந்து 27 பவுன் நகை கொள்ளை: தம்பதி கைது

வீடு புகுந்து 27 பவுன் நகை கொள்ளை:  தம்பதி கைது

திருடப்பட்ட நகைகள்


தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் திருமணி (65). இவா், கடந்த ஜூலை 26ஆம் தேதி வீட்டுச் சாவியை பக்கத்து வீட்டுக்காரரான அதே பகுதியைச் சோ்ந்த பில்லாயூஸ் மகன் ஜெய்ஸ் (34) என்பவரிடம் கொடுத்துவிட்டு, தனது மகளின் சிகிச்சைக்காக குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றாா்.

புதன்கிழமை (நவ. 1) வந்து பாா்த்தபோது, பீரோவிலிருந்த 27 பவுன் நகைகளைக் காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது பக்கத்து வீட்டுக்காரரான ஜெய்ஸ், அவரது மனைவி ஆஷா (28) எனத் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

Tags

Next Story