தேசிய கொடியேற்றி ஆட்சியர் மரியாதை

திண்டுக்கல்லில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் இதில் டி.ஐ.ஜி. அபேஷ் குமார் மீனா, எஸ் பி பிரதீப், டிஆர்ஓ காதர் மைதீன் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். சமாதான புறாக்களை பறக்க விட்டார். தியாகிகளை கௌரவித்தார். சிறந்த அலுவலர்கள், வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களும் , பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்பு கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் அரசின் திட்டங்களை விளக்கும் நாடகங்களும் நடத்தப்பட்டன. சிறப்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்திய மாணவ, மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்.

Tags

Next Story