ஊத்துக்குளி அருகே கோர விபத்து: தம்பதி பலி

ஊத்துக்குளி அருகே அரசு பஸ் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர்.

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (65). இவரது மனைவி சந்திரா (58). இவர்களுடன் இவர்களது மகள் ஐஸ்வர்யா (24) ஆகிய மூவரும் வாடகை காரில் திருப்பூரில் இருந்து மேட்டூரில் நடைபெற்ற பேத்தியின் காது குத்து நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

மேட்டூரில் நிகழ்ச்சி முடித்த பின்பு நேற்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஊத்துக்குளி புலவர் பாளையம் அருகே வந்த போது இவர்களுக்கு எதிரில் ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்து இவர்கள் பயணித்த வாடகை கார் மீது மோதியுள்ளது. இதில் காரில் பயணித்த ராமசாமி மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

மேலும் காரில் பயணித்த ஐஸ்வர்யா மற்றும் கார் ஓட்டுநர் மகேஷ் குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்க பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் அறிந்து வந்த ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்த ராமசாமி மற்றும் சந்திரா ஆகியோரின் உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story