திருமருகல் அருகே தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் அருகே தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு

தோட்டகலை அதிகாரிகள் ஆய்வு

நாகப்பட்டிஅம் மாவட்டம், திருமருகல் அருகே காய்கறி சாகுபடி பணிகளை தோட்டக்கலை அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி பகுதியில் மாநில தோட்டக்கலைத்துறை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கத்தரி,மிளகாய், மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களை திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகள் டெல்டா பகுதிகளில் நெல்,பயறு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர்.

இதற்கு மாற்று பயிராக கத்தரி,வெண்டை,புடலை,பாகற்காய் ,மிளகாய், மரவள்ளிக்கிழங்கு சாகுபடியினை சோதனை அடிப்படையில் ஒன்றியத்துக்குட்பட்ட விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய அறிவுறுத்தி தற்போது சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் கிடைப்பதாகவும், வியாபாரிகள் வீட்டிற்கே வந்து காய்கறிகளை எடுத்துச் செல்வதாகவும் இதனால் செலவில்லாமல் லாபம் ஈட்டி வருவதாக தெரிவிப்பதாகவும் இதேபோல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் முன்வந்து மாற்று பயிராக தோட்டக்கலை காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என கூறினார். இந்த ஆய்வின் போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story