ஓசூர்: கால்வாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்க கோரிக்கை

ஓசூர்: கால்வாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்க கோரிக்கை

மனு அளிக்க வந்தவர்கள் 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பகுதியில் உள்ள விளைநிலங்கள் வழியாக ஆலியாளம் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலங்களை இழந்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, ஆலியாளம் கால்வாய் திட்டத்துக்கு நிலம் தர மாட்டோம். இத்திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என ஆலியாளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags

Next Story