ஓட்டல் ஊழியர் உயிரிழப்பு - காவல் துறையினர் விசாரணை.

ஓட்டல் ஊழியர் உயிரிழப்பு - காவல் துறையினர் விசாரணை.

காவல் நிலையம் 

தர்மபுரி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் திடீர் உயிரிழப்பு குறித்து நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தைசேர்ந்தவர் சுரேஷ் இவருக்கு திருமணமாகி மனைவியும், மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் பணிக்கு சென்ற அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர் அங்கு சென்று சுரேசை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story